தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

  கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை தமிழக மாற்றுத்திறனாளி நலத்துறை அரசு செயலாளர் ஆனந்தகுமார் பார்வையிட்டு அதன் பயன்பாட்டினை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பேருக்கு ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 300 மதிப்பிலான செயற்கை கால், செயற்கை கை போன்றவற்றை வழங்கினார். தொடர்ந்து பஞ்சமாதேவி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விடியல் வீடு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டப்பட்டுள்ள வீட்டினை பார்வையிட்டு, அதன் சிறப்புகள் மற்றும் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். முன்னதாக சீத்தாப்பட்டி கிராமத்தில் ஒரு மனநலம் காப்பகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவு மையத்தினை பார்வையிட்டு, புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு