தமிழக செய்திகள்

5-வது காவல் ஆணையம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு -தமிழக அரசு அறிவிப்பு

சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இந்த காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு நேற்று வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு 5-வது காவல் ஆணையம் அமைத்தது. சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இந்த காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகளை தபால் மூலம் தெரிவிக்க விரும்புபவர்கள், 'தலைவர், 5-வது காவல் ஆணையம், காவல் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக் நகர், சென்னை-93' என்ற முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப விரும்புவோர், fifthpolicecommision@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் கருத்துகளை அனுப்பலாம்.

நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள், வருகிற டிசம்பர் 5-ந் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மேற்கண்ட முகவரிக்கு நேரடியாக சென்று கருத்துகளை சமர்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 9791987112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு