தமிழக செய்திகள்

மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் தெப்பக்குளத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா.

தினத்தந்தி

மகாளய அமாவாசை

ஆண்டுதோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே புளியங்குளம் எனப்பபடும் நகராட்சி தெப்பக்குளம் ஓரத்தில் அதிகாலை முதலே முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வந்து குவிந்தனர்.

தர்ப்பணம்

அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் திதி, தர்ப்பணம் செய்தனர். புரோகிதர்கள், சிவாச்சாரியர்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை ஒன்றாக வரிசையாக அமரவைத்து, அவர்களின் மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டு, அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். அதிகாலை தொடங்கிய தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு மதியம் வரை நடந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்