தமிழக செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் புகார் மனுக்களை போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதியிடம் வழங்கினர். அதனை சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT