தமிழக செய்திகள்

பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

தினத்தந்தி

கோவை,

தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

அதன்படி, பிளஸ்-2 செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ந்தேதி வெளியாகும் என்றும் பிளஸ்-1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு