தமிழக செய்திகள்

புதுக்கோட்டை தொகுதி மீண்டும் உருவாகும்

2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக புதுக்கோட்டை தொகுதி மீண்டும் உருவாகும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

தினத்தந்தி

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் செயல்படுகிறது என அண்ணாமலை கூறியது அர்த்தமற்றது. நாடு முழுவதும் மகளிருக்கான கொடுமைகளை களைவதற்காக மகளிர் உரிமை மாநாட்டை தி.மு.க. நடத்தியுள்ளது. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. கட்சியை விரட்டிவிட்டவர் அண்ணாமலை. இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் புலம்பி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெறுவதற்காக கூட்டு முயற்சியுடன் செயல்பட சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரை புதிதாக நியமிப்பதில் யாராக இருந்தாலும் வரவேற்கக்கூடியது தான். தொகுதி மறு சீரமைப்பில் புதுக்கோட்டை எம்.பி. தொகுதி பறிபோனது. அடுத்த மறு சீரமைப்பு வருகிற 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வரும். அப்போது தொகுதிகள் மாறும். இதில் சீரமைப்பு குழுவில் புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீண்டும் வர கோரிக்கை வைத்து வலியுறுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், மாவட்ட தலைநகரத்துடன் இருப்பதால் தொகுதி மீண்டும் வரும். நான் மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி தலைமை முடிவு செய்யும்'' என்றார். முன்னதாக அரசு மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அவர் தொடங்கி வைத்து பேசினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து