தமிழக செய்திகள்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சாவு

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினத்தந்தி

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவர், வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயன், சென்னை புழல் தண்டனை சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 11-ந்தேதி சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 15-ந் தேதி அவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கைதி விஜயன், நேற்று உயிரிழந்தார். இது குறித்து சிறை அலுவலர் இளங்கோ அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை