தமிழக செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி...!

சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக புழல் ஏரி உள்ளது.

தினத்தந்தி

 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு