தமிழக செய்திகள்

ஏடிஎம்-யில் பணம் வராத ஆத்திரம்... கண்ணாடியை அடித்து நொறுக்கிய ஆட்டோ ஓட்டுநர்

நெல்லையில் ஏடிஎம்-மில் பணம் வராததால், ஆத்திரத்தில் கதவு கண்னாடியை உடைத்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் கொக்கிரக்குளம் பகுதியில் மதுபோதையில் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முற்பட்டபோது பணம் வராததால், ஆத்திரம் அடைந்த அவர், ஏடிஎம்-மின் கதவு கண்ணாடியை உடைத்துச்சென்றுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை