தமிழக செய்திகள்

கர்நாடக தேர்தலுக்குப் பின் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கும் - கரூர் எம்.பி. ஜோதிமணி தகவல்

அ.தி.மு.க. தனித்து செயல்பட முடியாதவாறு பா.ஜ.க.வின் ஆளுமைக்குள் சிக்கியுள்ளது என ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீரில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கும் புதுக்கோட்டையில் கரூர் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்து செயல்பட முடியாதவாறு பா.ஜ.க.வின் ஆளுமைக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்