தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி

திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்.

தினத்தந்தி

திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 42). இவர், பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சரி பார்க்கும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற வேணுகோபால் அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் திருவொற்றியூர் ரயில்வே யார்டு அருகே வேணுகோபால் ரயில் மோதி இறந்து கிடந்தார். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வேணுகோபால் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டை மூலம் அவரது வீட்டை அடையாளம் கண்டு குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு