தமிழக செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் கூச்சல் போட்ட 100 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் கூச்சல் போட்ட 100 மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்யதனர்.

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்கள், நேற்று கூச்சல் போட்டனர். மேலும், அதுமட்டுமின்றி, அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தினர்.

இந்த நிலையில், ரெயில் நிலைய வளாகத்தில் கூச்சல் போட்ட 100 மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்யதனர். ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளில் கீழ் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

SCROLL FOR NEXT