கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் கரூர்,திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. தற்போதுதான் சென்னையில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து