தமிழக செய்திகள்

மழைக்கால விடுமுறை; சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடலாம் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அதே போல் விடுமுறை விடப்பட்ட நாட்களுக்கு ஈடு செய்யும் விதமாக தேவைப்படும் இடங்களில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்தும் கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு