தமிழக செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை

சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

விமான நிலையம் பகுதியை அடுத்துள்ள குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல்,அம்பத்தூர், பாடி கொரட்டூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. காட்டுப்பாக்கம், மாங்காடு, குமணன்சாவடி, உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்கிறது.

கனமழை காரணமாக அம்பத்தூர் பகுதியில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்