தமிழக செய்திகள்

மழைநீர் வடிகால் பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் மழைக்கால வெள்ள தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

வடகிழக்கு பருவமழை தற்போதைய கணினி மாதிரியின் அடிப்படையில் இம்மாதம் (அக்டோபர்) 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், இயல்பை ஒட்டியே மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.608 கோடி செலவில், 179 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், வெள்ள தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். பிராட்வே என்எஸ்சி போஸ் சாலையில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மழை நீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகள் எந்த அளவு முடிந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை