தமிழக செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தினத்தந்தி

புதுக்கோட்டையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊாவலம் இன்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலத்தை கலெக்டர் மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்றனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலக சாலை, அரசு மகளிர் கல்லூரி வழியாக ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது. முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டதை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். இந்நிகழ்வில், நிர்வாகப் பொறியாளர் அய்யாசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை