தமிழக செய்திகள்

மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரண்யா, குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் எழிலரசன், நிர்வாக பொறியாளர்கள் நாகானந்த், வசந்தி, உமா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை