தமிழக செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் கவர்னருக்கு அழுத்தம் - அமைச்சர் ரகுபதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து மீண்டும் அழுத்தம் தரப்படும் சேலத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.

தினத்தந்தி

சேலம்

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து கவர்னரே முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டு நல்ல முடிவு கொடுக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம். 7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என கூறினார்.

இதனிடையே அமைச்சருடன் சிறைசாலைக்குள் தி.மு.க நிர்வாகிகள் சிலர் சென்றதால் இந்த சம்பவம் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்