தமிழக செய்திகள்

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: கனிமொழி உட்பட திமுகவினர் கைதாகி விடுதலை

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற எம்.பி கனிமொழி உட்பட திமுகவினர் அனைவரும் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் கையில் ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். போலீசாரின் தடையை மீறி பேரணி சென்றதாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு நடந்த பேரணியில் கைது செய்யப்பட்ட திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி விடுதலை செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி, போலீசாரின் தடையை மீறி பேரணி செல்ல முயன்று கைது செய்யப்பட்ட திமுக மகளிரணியினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி, பெண்களின் பாதுகாப்புக்கான சூழலை நிச்சயம் திமுக உருவாக்கித் தரும். ஹத்ராஸ் சம்பவம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். ஆளுநரிடம் மனு அளிக்க செல்வதைக் கூட தடுக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உள்ளது. ஆளுநரை சந்திக்க சென்றதை ஏன் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு