தமிழக செய்திகள்

ராமநாதசுவாமி கோவில் நடை நாளை அடைப்பு

காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்றிருக்கும் ராமநாதசுவாமி கோவில் ராமாயண வரலாற்று கதைகள் நிறைந்த புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட முக்கிய பகுதியாக உள்ளது.

இந்த நிலையில், தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி திருக்கோயிலின் நடை நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றாற்போல் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருமாறும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.