தமிழக செய்திகள்

2 ஆட்டோக்களில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

குமரியில் 2 ஆட்டோக்களில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

குமரியில் 2 ஆட்டோக்களில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரம் மற்றும் போலீசார் நேற்று சின்னமுட்டம் சுனாமி காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் போலீசாரை கண்டதும் ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் போலீசார் ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 325 கிலோ ரேஷன் அாசி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைதொடர்நது ஆட்டோவுடன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல கன்னியாகுமரி கோவளம் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்த போது ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே சமயத்தில் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்