தமிழக செய்திகள்

அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டை கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மரத்தில் தூக்குப்போட்டு தொங்கியபடி உடல் அழுகிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மஞ்சப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பையன், கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை மரத்தில் தொங்க விட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு