தமிழக செய்திகள்

நவம்பர் 22ம் தேதி நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் நவம்பர் 22ம் தேதி ஆண்கள் 60 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தினத்தந்தி

திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படையினர் (Home Guards) புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து வரும் 22.11.2025, சனிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆண்கள் 60 பேர் மற்றும் பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் ஆவணங்களுடன் பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகுதிகள்:

1. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. 18 வயதிற்கு குறையாமலும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

3. திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.

கொண்டு வர வேண்டிய ஆவனங்கள்:

1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2 (கலர்).

2. கல்வித் தகுதிச் சான்று (அசல் மற்றும் நகல்).

3. ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்).

4. இருப்பிடச் சான்று (அசல் மற்றும் நகல்) ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து