தமிழக செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் அளவு குறைப்பு

முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவதற்காக திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

தினத்தந்தி

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,109 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141.40 அடியாக இருந்தது. இந்த ஆண்டு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் நேற்று அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 அடியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் நேற்று காலை முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை