தமிழக செய்திகள்

சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர், வேப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட சாரணர் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு பெரம்பலூர் கல்வி மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முகாமில் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களை சார்ந்த 90 பள்ளிகளை சேர்ந்த சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கடலூர் மாவட்ட பயிற்சி ஆணையர் செந்தில்குமார், முசிறி கல்வி மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் வேணுகோபால் ஆகியோர் சாரண இயக்க வரலாறு, கொடி ஏற்றும் முறை, சாரண பாடல்கள், முதலுதவி, சாரண சட்டம், சாரண சைகை, இடது கை குலுக்கல் முறை, சாரண குறிக்கோள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். முன்னதாக பெரம்பலூர் கல்வி மாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்றார். முடிவில் வேப்பூர் கல்வி மாவட்ட செயலாளர் தனபால் நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...