தமிழக செய்திகள்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியை பார்வையிட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நடுக்காட்டுப்பட்டிக்கு வருகை

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்பு பணிகளை குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 54 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க ரிக் இயந்திரத்தால் இதுவரை 35 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் சுமார் 88 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்த நிலையில் குழி தோண்டும் பணியை அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்து வருகிறார். குழந்தையின் மீட்புப்பணிகள் குறித்து துணை முதல்வரிடம் அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்