தமிழக செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்

உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் சமூக வலைதளத்தில் ஆடியோ வைரல்

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் முருகன். இவர் நேற்று மாலை திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) நடராஜனை போனில் தொடர்பு கொண்டு ஊராட்சி செயலாளருக்கு சம்பளம் போடுவது குறித்து பேசினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சிக்கு சென்ற நடராஜன் அரசு பிரதிநிதிகளை ஏளனமாக பேசியதோடு, ஊராட்சி மன்ற தலைவரையும் ஆபாசமாக பேசி, சஸ்பென்டு செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு போனை துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த உரையாடல் குறித்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு