தமிழக செய்திகள்

பஸ் நிறுத்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பஸ் நிறுத்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அறந்தாங்கி பஸ் நிறுத்த பகுதியில் உள்ள கடைகளின் முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் நேற்று அறந்தாங்கி நகராட்சி ஊழியர்கள் பஸ் நிறுத்தம் மற்றும் அதன் பின் பகுதியில் உள்ள கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டி வைத்திருந்த குடிசை உள்ளிட்டவற்றை அகற்றினர். 

SCROLL FOR NEXT