தமிழக செய்திகள்

சென்னை காசிமேட்டில் பைப் லைனில் ஏற்பட்ட கசிவால் குளம் போல் தேங்கிய எண்ணெய் அகற்றம்

சென்னை காசிமேடு துறைமுகத்தில் குளம் போல் தேங்கிய எண்ணெய் கசிவு முழுவதுமாக அகற்றப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூர் எண்ணெய் நிறுவனம் வரை பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழியாக செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழாய்களில் விரிசல் ஏற்பட்டதால், எண்ணெய் முழுவதும் வெளியேறி கப்பல் கட்டும் தளத்தில் குளம் போல் தேங்கியது.

இதை பணிக்கு வந்த மீனவர்கள் கண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 2.5 டன் அளவு குளம் போல் தேங்கி நின்ற எண்ணெய்யை உடனடியாக அகற்றும் பணியில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர். வாளிகள், குழாய்கள் ஆகியவற்றைக் கொண்டு எண்ணெய் கசிவை அதிகாரிகள் முழுவதுமாக அகற்றினர்.  

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு