தமிழக செய்திகள்

ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

சங்கராபுரத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தினத்தந்தி

சங்கராபுரம்:

சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு காட்டுவன்னஞ்சூர், சிப்காட் அருகில் ஓடையை 7 பேர் ஆக்கிரமித்து சோளம், நெல் சாகுபடி செய்திருந்தனர். இது பற்றி அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், வட்ட சார் ஆய்வாளர் பிரபாகர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் நேரில் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்போது சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு, ஏட்டு புருஷோத்தமன்சிங் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை