தமிழக செய்திகள்

மின்பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்

திருவெண்காடு, பெருந்தோட்டம் பகுதியில் மின்பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.

தினத்தந்தி

திருவெண்காடு:

சீர்காழி மின்வாரிய கோட்ட உதவி பொறியாளர் விஜய பாரதி மேற்பார்வையில் திருவெண்காடு உதவி பொறியாளர் ரமேஷ், ஆக்க முகவர் குணசேகரன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் நேற்று திருவெண்காடு, சம்பா கட்டளை, வடபாதி, அம்பேத்கர் நகர், சின்ன பெருந்தோட்டம், அகர பெருந்தோட்டம், நாயக்கர் குப்பம் உள்ளிட்ட இடங்களில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழுதடைந்த இன்சுலேட்டர்களை அகற்றிவிட்டு புதிய இன்சுலேட்டர்களை பொருத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்