தமிழக செய்திகள்

போலீசாரின் அனுமதி பெற்று வீடுகளை வாடகைக்கு விட வேண்டும்: அதிகாரி தகவல்

வேலாயுதம்பாளையம் பகுதியில் பாலீசாரின் அனுமதி பெற்று வீடுகளை வாடகைக்கு விட வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

தினத்தந்தி

வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் சொந்த வீடுகளை வாடகைக்கு விடும்போது, குடிபெயரும் நபர்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுக்கான நகலை வாங்கிக்கொள்ள வேண்டும், மேலும் பாலீசாரின் அனுமதி பெற்ற பிறகு தான் அவர்களை குடியமர்த்த வேண்டும், மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் பகுதியில் தங்கி இருந்து நோட்டமிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கலாம். மேற்கண்ட தகவலை அரவக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து