தமிழக செய்திகள்

2 எந்திரங்களில் பழுது: தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுவப்பட்டு நீண்டகாலம் ஆவதால், அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாக மின்சார தேவைக்கு ஏற்பட மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தன. கடந்த சிலநாட்களாக முழு வீச்சில் மின்சார உற்பத்தி நடந்து வந்தது.

இந்த நிலையில் திடீரென 2 மின்உற்பத்தி எந்திரங்கள் திடீரென பழுதடைந்து உள்ளது. அதன்படி 1-வது மின்உற்பத்தி எந்திரம், 5-வது மின் உற்பத்தி எந்திரத்தில் உள்ள கெதிகலனில் பழுது ஏற்பட்டு உள்ளது.

இதனால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனல்மின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை