தமிழக செய்திகள்

மாஜிஸ்திரேட்டை கண்டித்துபோஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது வழக்கு

மாஜிஸ்திரேட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி புதிய பஸ் நிலையத்தில், நாட்டுமாடுகள் நலச்சங்கம் பெயரில் மாஜிஸ்திரேட்டை கண்டித்து அவதூறான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து நாட்டு மாடுகள் நலச்சங்க தலைவரான ஜங்கால்பட்டியை சேர்ந்த கலைவாணன் (வயது54), செயலாளரான கோட்டூரை சேர்ந்த ஆதி (36) ஆகிய 2 பேர் மீதும் தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்தார். இந்த போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT