தமிழக செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க போலீசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

நாமக்கல் மாவட்டம், சீதாராம்பாளையத்தை சேர்ந்தவர் வைரவேல். இவர், திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர், எங்களுக்கும் கல் வீசத்தெரியும். சோடா பாட்டில்களை எறியத் தெரியும். நாங்கள் எல்லாம் அமைதியானவர்கள் என்று நினைக்காதீர்கள். எதையும் செய்யும் தைரியம் எங்களுக்கும் உள்ளது என்று பேசியுள்ளார்.

இவரது பேச்சு கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளதாக திருச்செங்கோடு போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு, திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...