தமிழக செய்திகள்

மாயமான வாலிபர் ஏரியில் பிணமாக மீட்பு

விக்கிரமங்கலம் அருகே மாயமான வாலிபர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோரைக்குழி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 33). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மாதம் கோரைக்குழிக்கு வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அங்குள்ள பெரிய ஏரியில் அன்பரசன் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்