தமிழக செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு

கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்கப்பட்டது.

தினத்தந்தி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி செல்லும் சாலையை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் 12 அடி ஆழம் கொண்ட கிணற்றில் காட்டெருமை தவறி விழுந்தது. அதனால் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரகர் செல்வகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி 8 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் காட்டெருமை வெளியே வர வழி ஏற்படுத்தி கொடுத்து, காட்டெருமையை மீட்டனர். வெளியே வந்த காட்டெருமை ஆக்ரோஷமாக அங்கிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது. மேலும் பயன்படுத்தாத குடிநீர் கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்