தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த காளை மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த காளை மீட்கப்பட்டது.

தினத்தந்தி

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிபட்டி கிராமத்தில் நேற்று சேவகபெருமாள் அய்யனார் கோவில் காளை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த 50 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராதவிதமாக அந்த காளை தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் காளை காயம் இன்றி தப்பியது.

இதுகுறித்து அறிந்த சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் காளையை மீட்டு மேலே கொண்டு வந்தனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்