தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு

உவரி அருகே கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்கப்பட்டது.

திசையன்விளை:

குட்டத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி மார்த்தாண்டம். இவருக்கு சொந்தமான பம்புசெட் தோட்டம் ஆதித்தனார் நகரில் உள்ளது. அங்குள்ள கிணற்றில் மயில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்ததும் திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் வந்தனர். கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனர்.

SCROLL FOR NEXT