தமிழக செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்திருக்கும் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவு

உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்திருக்கும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பார்கள். அதன் மூலம், மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் காத்திருக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT