தமிழக செய்திகள்

ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. சுப்பையா சென்னையில் மரணம்

ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. சுப்பையா சென்னையில் மரணம்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு ஐ.ஜியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுப்பையா. அவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவாக இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அவரது பிறந்த ஊராகும். 1978-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்த அவர் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். அவர் அப்போதைய செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் 5 ஆண்டுகள் போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை வில்லிவாக்கம் மயானத்தில் அவரது உடலுக்கான இறுதி சடங்குகள் நேற்று நடந்தன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை