தமிழக செய்திகள்

பூந்தமல்லி- அரக்கோணம் சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பூந்தமல்லி- அரக்கோணம் சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினத்தந்தி

பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் விஸ்வநாதபுரம், காந்தி பேட்டை, உளுந்தை, மப்பேடு, சமத்துவபுரம், உசேன் நகரம் போன்ற பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே கால்நடைகள் படுத்து ஓய்வெடுக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாகனத்தை கால்நடைகளின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் கால்நடைகளுக்கும் காயம் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் படுத்து கிடப்பது தெரியாததால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. எனவே பூந்தமல்லி அரக்கோணம் சாலையில் மேற்கண்ட பகுதியில் சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் கால்நடைகளை பிடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை