தமிழக செய்திகள்

கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

வடசேரி பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் பஸ்நிலையத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் பாதை சரிவர பராமரிப்பு இல்லாததால் பல நேரங்களில் சாக்கடை நீர் பஸ்நிலையத்தில் தேங்குகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள் கழிவுநீரை மிதித்து செல்லவேண்டிய நிலை உள்ளது. கழிவுநீர் செல்லும் பகுதியில் பாசிபடர்ந்து காணப்படுகிறது.

மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு