தமிழக செய்திகள்

டுவிட்டரில் பாம்பின் புகைப்படத்தை பதிவிட்ட ஆர்.கே.சுரேஷ் - தொழில்நுட்ப ரீதியாக போலீசார் தீவிர விசாரணை

ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டு, அடுத்த 10 நிமிடங்களில் அதை நீக்கியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

மேலும் திருச்சியை மையமாக கொண்டு செயல்படும் நிதி நிறுவனத்தின் மோசடியிலும் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டு, அடுத்த 10 நிமிடங்களில் அதை நீக்கியுள்ளார். இதையடுத்து ஆர்.கே.சுரேஷ் எந்த இடத்தில் இருந்து டுவிட்டர் கணக்கை பயன்படுத்தினார் என்பதை கண்டறிய தொழில்நுட்ப ரீதியாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்