தமிழக செய்திகள்

ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி காலனியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 56). இவரது மகள் ஷாலினி (22). இவர் கடந்த 9-ந்தேதி முதல் மாயமானார் என்று அவரது தந்தை பரந்தாமன் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சூர்யா (25) ஷாலினியுடன் ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜு முன்னிலையில் நேற்று தஞ்சம் அடைந்தார்.

தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் திருப்பதி கங்கையம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து இரு வீட்டார் பெற்றோர்களையும் போலீசார் அங்கு வரவழைத்தனர். அவர்கள் முன்னிலையில் காதலர்களிடம் விசாரணை நடந்தது. காதலன் சூர்யாவுடன் செல்ல விரும்புவதாக ஷாலினி தெரிவித்தார் இதைத் தொடர்ந்து சூர்யாவுடன் ஷாலினியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு