தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தினத்தந்தி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் மக்கா அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்சுதீன், பொறுப்பாளர்கள் ஹீரா, காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக வார்டு கவுன்சிலர்கள் கண்ணன் என்ற பாலசுப்பிரமணியன், சுபா ராஜேந்திர பிரசாத், பூங்கோதை கருப்பையா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணாபுரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ்நிலையத்தில் முடிவு பெற்றது. போதை தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு குறித்து பதாகைகளை ஏந்தியவாறு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஷேக் மைதீன், யாசின், பைசல் அமீர்கான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை பொறுப்பாளர் மீராசா இப்ராஹிம் நன்றி கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு