தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஜோலார்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள்வழியாக கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சப்- இன்ஸ்பெக்டர் காதர் கான் உள்ளிட்ட போலீசார், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT