தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வார தொடக்க விழா நடைபெற்றது. சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகம் அதிக ஆபத்து உள்ளிட்ட வாசகங்களை முன்னிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த சாலை பாதுகாப்பு வார தொடக்க விழா நிகழ்ச்சி காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே காஞ்சீபுரம் மாவட்ட மருத்துவர்கள் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.

மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் விநாயகம், போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு