தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை - பொதுமக்கள் பீதி...!

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஆர்.எம். காலனி 4-வது குறுக்கு தெருவில் லியான் என்பவர் வீடு, 7-வது குறுக்கு தெருவில் ராஜகோபால் என்பவர் வீடு, தாடிக்கொம்பு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசாமி காலனி 7-வது தெருவில் அருள்தாஸ் என்பவர் வீடு என அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்ப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்